தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

10 கிரஷர் லாரிகள் சிறை பிடிப்பு போலீசார் பேச்சுவார்த்தை செய்யாறு அருகே

செய்யாறு, அக். 4: செய்யாறு அருகே மாரியநல்லூர் பகுதியில் அளவுக்கு அதிகமான பாரங்களை ஏற்றி செல்லும் 10க்கும் மேற்பட்ட கிரஷர் லாரிகளை பொதுமக்கள் நேற்று மாலை சிறை பிடித்தனர். செய்யாறு அருகே மாரியநல்லூர் கிராமத்தைச் சுற்றி 5 குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் மாரியநல்லூர் வழியாக தினந்தோறும் நூறிலிருந்து 150 கனரக வாகனங்களில் 24 மணி நேரமும் அளவுக்கு அதிகமான எடை கொண்ட பாறைகள், ஜல்லிகற்கள், எம் சாண்ட் உள்ளிட்டவைகளை லாரிகளில் ஏற்றி செல்கின்றனர். இதனால் கிராமப்புற சாலை சேதமடைந்து உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மாரியநல்லூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதியின் வழியாகச் சென்ற எம் சாண்ட் ஏற்றி செல்லும் லாரி சென்ற வேகத்தில் பின்புற கதவுகள் திறந்து ஈரத்தோடு இருந்த எம் சென்ட் சிதறியதால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் மீது விழுந்தது.

Advertisement

மேலும் எம்சாண்ட் கொட்டிக்கொன்றே சென்றதால் சாலையில் பயணிக்க முடியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் தவித்தனர். இதனை தொடர்ந்து அவ்வழியாக வந்த 10 லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த மோரணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி அதிக பாரங்களை ஏற்றி செல்வதை தடுக்க வேண்டும். தார்பாய் கொண்டு மூடி எடுத்து செல்ல வேண்டும். கிராம் வழியாக செல்லாமல் மாற்று பாதைகள் அமைத்து எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி லாரிகளை விடுவித்தனர்.

Advertisement