தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆன்லைன் தரிசன டிக்கெட் முன்பதிவு நெட்ஒர்க் சிக்கலால் பக்தர்கள் ஏமாற்றம் திருவண்ணாமலை தீபத்திருவிழா

திருவண்ணாமலை, டிச.2: திருவண்ணாமலையில் நாளை நடைபெறும் பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசனத்துக்கான ஆன்லைன் சிறப்பு கட்டண தரிசன டிக்கெட் பெற முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீப பெருவிழா நாளை(3ம் தேதி) நடக்கிறது. அதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகாதீபமும் ஏற்றப்படும். இந்நிலையில், பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்திற்கு கோயிலுக்குள் அனுமதிக்க 1600 பேருக்கு கட்டண தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, பரணி தீப தரிசனத்துக்கு ரூ.500 கட்டணத்தில் 500 டிக்கெட்களும், மகா தீப தரிசனத்துக்கு ரூ.500 கட்டணத்தில் ஆயிரம் டிக்கெட்களும், ரூ.600 கட்டணத்தில் 100 டிக்கெட்களும் முன்பதிவு செய்யும் வகையில், நேற்று காலை 10 மணிக்கு கோயில் இணையதளத்தில் கட்டணம் செலுத்தி பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

Advertisement

அதில், ஆதார் எண், செல்போன் எண், இமெயில் முகவரி ஆகியவற்றை பதிவேற்றம் செய்து, வங்கி ஏடிஎம் கார்டு மூலம் கட்டணம் செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், நெட் ஒர்க் சிக்கல் ஏற்பட்டதால், ஆன்லைன் டிக்கெட் பெற தொடர்ந்து பல முறை முயற்சித்தும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், காலை 11 மணியளவில் அனுமதிக்கப்பட்ட 1,600 தரிசன டிக்கெட்களும் விற்று தீர்ந்ததாக இணையத்தில் தகவல் வெளியானது. அதனால், ஆன்லைன் டிக்கெட் பெறலாம் என காத்திருந்த பலரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர்.

Advertisement

Related News