தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடியிருப்புகள் மீது அடுத்தடுத்து கற்கள் வீச்சு போலீசார் விசாரிக்கும்போதும் விழுந்ததால் பரபரப்பு செய்யாறில் நேற்றிரவு

செய்யாறு, நவ.1: செய்யாறில் 8 வீடுகள் மீது அடுத்தடுத்து கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதி உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்நிலையில் மாரியம்மன் கோயில் தெரு கடைசியில் 8 வீடுகளின் மீது நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் அடுத்தடுத்து கற்கள் விழுந்தன. இதனால் வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்து பார்த்தபோது மீண்டும் கற்கள் சாலைகளில் சரமாரியாக வந்து விழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பதற்றமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு போலீஸ் எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் விசாரித்துக்கொண்டிருந்தனர். அப்போது மீண்டும் கற்கள் வந்து விழுந்தன. அதில் உடைந்த செங்கற்களும், சிமெண்ட் கலவை பூசிய ரப்பீஸ் கற்களும் வந்து விழுந்தன. போலீசார் விசாரித்துக்கொண்டிருந்தபோதே தொடர்ந்து கற்கள் விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை. இதையடுத்து அருகில் உள்ள செங்கல் சூளை மற்றும் வயல்வெளி பகுதிகளில் யாரேனும் மர்மநபர்கள் வீசுகிறார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement

Advertisement

Related News