தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டின் பூட்டு உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளி, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை சென்னைக்கு மூதாட்டி சென்ற நிலையில்

செய்யாறு, நவ. 1: செய்யாறு அருகே மூதாட்டி வீட்டில் ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருட்கள், பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமம் ரத்னா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி வேதகவுரி(70). கணவர் இறந்து விட்டதால் வேதகவுரி தனியாக வசித்து வருகிறார். இவரது மகனுக்கு திருமணமாகி சென்னை ஐயப்பன் தாங்கலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வேதகவுரி, கடந்த 20ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார். அங்கு தங்கிவிட்டு நேற்றுமுன்தினம் மதியம் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கலைத்து வீசப்பட்டிருந்தது.

Advertisement

பூஜை அறையில் இருந்த வெள்ளியால் ஆன காமாட்சி அம்மன் விளக்கு, தூபம் உள்ளிட்ட ஒன்றரை கிலோ எடையுள்ள வெள்ளி பூஜை பொருட்கள், ரொக்கம் ரூ.7 ஆயிரம், பெரிய எல்இடி டிவி உள்பட மொத்தம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து தூசி போலீசில் நேற்றுமுன்தினம் மாலை வேதகவுரி புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து, வெள்ளிப்பொருட்கள், பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Advertisement

Related News