தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புழல் பகுதியில் உள்ள கிராம சாலைகளில் அறிவிப்பு பலகை அமைக்க கோரிக்கை

புழல்: சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், உள்ளூர் உட்புறச் சாலைகள் வழியாக பல்வேறு கிராமங்களுக்குச் செல்வதற்கான வழிகளில், அந்தந்த கிராமத்தின் பெயர் கொண்ட அறிவிப்பு பலகைகள் வைக்கப்படவில்லை. இதனால், வாகனங்களில் செல்வோர் வழி தெரியாமல் நீண்ட தூரம் நெடுஞ்சாலை வழியாக சென்று, திரும்பி வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

Advertisement

கிராம பகுதிகளுக்குச் செல்ல வழி தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். பல்லாயிரம் கோடி செலவில் சாலை அமைக்கும் நெடுஞ்சாலைத்துறை, சில ஆயிரம் செலவில் கிராம பகுதிகளுக்கு செல்வதற்கான அறிவிப்பு பலகை வைக்க ஏன் அலட்சியம் காட்டுகிறார்கள் என வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்புகின்றனர். இதில், செங்குன்றம் அடுத்த காரனோடை பாலம் உட்புற சாலை பகுதியான ஜனப்பன்சத்திரம், பெரியபாளையம் வழிப்பலகை இல்லை.

அதேபோன்று, தச்சூர் கூட்ரோடு பாலம் தொடக்கத்தில் பொன்னேரி செல்வதற்கான பெயர் பலகை இல்லை. தொடர்ந்து, கவரப்பேட்டை பாலத்தில் உட்புறசாலைக்கான பெயர் பலகை இல்லாமல், பாலத்தின் மீது சென்று மீண்டும் கவரப்பேட்டைக்கு வருவதற்கான நிலை உள்ளது. இதேபோன்ற நிலைதான் சென்னை - கொல்கத்தா சாலை முழுவதும் உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை உட்புற சாலைகளுக்கு பெயர் பலகை இல்லாமல், பல ஊர்களில் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டிய கிராமங்களுக்குச் செல்வதற்கான வழி தெரியாமல், பாலத்தின் மீது சென்று மீண்டும் திரும்பி வருகின்ற நிலை உள்ளது. இதனால், தேசிய நெடுஞ்சாலைத்துறை உட்புற சாலைகள் பிரிகின்ற பகுதியில் கிராமத்தின் பெயர் எழுதிய, பெயர் பலகைகளை மிகப் பெரியதாக வைத்து வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Advertisement