தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எல்கேஜி சேர்க்கை 25% இட ஒதுக்கீடுக்கு இன்று கடைசி நாள்

Advertisement

 

 

திருவள்ளூர், அக்.9: திருவள்ளூர் மாவட்டத்தில் எல்கேஜி சேர்க்கை பெற்றுள்ள மாணவர்கள், ஆர்டிஇ 25 சதவீத இட ஒதுக்கீடு பெற்றிட உரிய சான்றிதழ்களை பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் கலெக்டர் மு.பிரதாப் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை, சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 2025-2026 கல்வி ஆண்டில் 30.09.2025 நிலவரப்படி நுழைவுநிலை வகுப்பில் எல்கேஜி சேர்க்கை செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்டிஇ 25 சதவீத இட ஒதுக்கீடு பெற்றிட உரிய சான்றிதழ்களையும் வயது, வருமானம், சாதி, இருப்பிடம் மற்றும் சிறப்பு உரிமை மற்றும் உறுதிமொழி படிவத்தினை பள்ளி முதல்வர்களிடம் பெற்று அந்தந்த பள்ளிகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதற்கு இன்றுதான் கடைசி தேதி. ஆர்டிஇ 25 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி தகுதியுடைய மாணவர்களின் இறுதிப் பட்டியல் வரும் 14ம்தேதி அந்தந்த பள்ளிகளில் தகவல் பலகையில் வெளியிடப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement