தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதையில் வாலிபர் ஓட்டிய கார் மோதி 5 வாகனம் சேதம்

மாதவரம், டிச.8: போதையில் காரை தாறுமாறாக ஓட்டி பைக் உள்பட 5க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் நேற்று முன்தினம் கார் ஒன்று தறிகெட்டு ஓடி, பைக்கில் சென்ற நபர் மீது மோதியது. இதனால் பொதுமக்கள் அந்த காரை பிடிக்க முயன்றபோது அதிவேகமாக சென்றுவிட்டது.

Advertisement

இதன்பின்னர் கொளத்தூர் திருவீதி அம்மன் சாலை, காமராஜர் சாலை, பெரியார் நகர் மின்சார வாரிய அலுவலகம் வழியாக வேகமாக சென்ற அந்த கார், அடுத்தடுத்த வாகனங்களை இடித்து சேதப்படுத்திவிட்டு சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து வில்லிவாக்கம், அயனாவரம் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதன்பின்னர் அயனாவரம் பகுதியில் அந்த காரை போலீசார் பிடித்து, காரை ஓட்டிவந்தவரிடம் விசாரித்த போது, கொளத்தூர் ஜவகர் நகர் கண்ணபிரான் கோயில் தெருவை சேர்ந்த அசோக் (28) என்பதும், அவர் போதையில் இருந்ததும் தெரிந்தது. இதுகுறித்து கொளத்தூர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து, அசோக்கை ைகது செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement

Related News