தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருத்தணி முருகன் கோயிலில் கூடுதல் விலைக்கு மலர்மாலை விற்பனை: விலை பட்டியல் வைக்க கோரிக்கை

திருத்தணி, ஆக.11: திருத்தணி முருகன் கோயிலுக்கு வருகை தரும் ஏராளமான பக்தர்கள் முருகப்பெருமானுக்கு மலர்மாலை அணிவித்து, அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம். பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில், மலர்மாலை கடை மற்றும் தேங்காய், பூஜை பொருட்கள் கடைகள் குத்தகை உரிமம் வழங்கி வியாபாரம் நடைபெற்று வருகிறது.கடந்த மாதம் மலைக்கோயிலில் மலர் மாலைகள் விற்பனை செய்யும் கடைக்கு 2025-26ம் ஆண்டுக்கான குத்தகை உரிமம் ஆன்லைன் மூலம் ரூ.26 லட்சத்திற்கு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், குத்தகை உரிமம் பெற அதிக தொகை செலுத்தி மலர்மாலை கடை எடுக்கப்பட்டுள்ளதால், சாதாரண பக்தர்கள் பாதிக்கும் வகையில் மலர்மாலை விலையை உயர்த்தி ரூ.200 முதல் ரூ.500 வரை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாமிக்கு மாலை அணிவிக்க விரும்பும் பக்தர்கள் விலை அதிகமாக இருப்பதால், பணம் செலுத்தி மாலை வாங்க முடியாத நிலையில் வேதனையுடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குமுறுகின்றனர். இதனால், கடைக்கு முன்பு மலர்மாலை விலை தொடர்பாக விலை பட்டியல் வைக்கவும், மலர்மாலைக்கு அனுமதி பெற்று பஞ்சாமிர்தம், சந்தனம், முருகன் மாலை அணியும் மணிமாலை உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனையை தடை செய்யவும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News