தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தபால்நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி செய்தவர் கைது

திருவள்ளூர், செப். 2: அரக்கோணம், மேல்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜி (40). இவரது உறவினரான பெத்துராஜ் என்பவர் மூலம் கடந்த 2022ம் ஆண்டு மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜீவானந்தம் (49) என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து விஜியிடம் தபால் நிலைத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஜீவானந்தமும், அவரது மனைவி கலாசெல்வியும் சேர்ந்து கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதலில் ரூ.9.90 லட்சம் பெற்றுள்ளனர். பிறகு தொடர்ந்து 5 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3.10 லட்சம் பெற்றுள்ளர்.

Advertisement

ஆனால் அவர்கள் வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். பலமுறை கேட்டும் வேலை வாங்கித் தராததால் விஜி கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது அவர்கள் போலி காசோலையை கொடுத்துள்ளனர். அந்த காசோலையை விஜி வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பியது. இதனால் விஜி கடந்த பிப்ரவரி 19ம் தேதி திருவள்ளூர் மாவட்ட எஸ்பியிடம் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் பணத்தை திருப்பி தராமல் ஜீவானந்தம் ஏமாற்றி வந்தது உறுதியானது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் ஜீவானந்தத்தை நேற்று முன்தினம் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News