தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காங்கயத்தில் வெறிநாய்கள் கடித்து குதறியதில் 5 ஆடுகள் பலி

காங்கயம்,நவ.26: காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்து குதறியதில் 5 ஆடுகள் உயிரிழந்தன. மேலும் 8 ஆடுகள் படுகாயம் அடைந்தன. காங்கயம், பாப்பினி பஞ்சாயத்துக்குட்பட்ட வரதப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (60). இவர் விவசாயத்துடன் கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் 30 செம்மறி ஆடுகளை வழக்கம்போல் இரவு பட்டிக்குள் அடைத்து விட்டு, தூங்க சென்றுள்ளார்.அப்போது பட்டிக்குள் புகுந்த வெறிநாய்கள் ஆடுகளை கொலை வெறியுடன் கடித்து குதறியது.இதில் 3 பெரிய செம்மறி ஆடுகள், 2 குட்டிகள் இறந்தன.

Advertisement

மீதமுள்ள ஆடுகள் பட்டியில் இருந்து வெளியே சிதறி ஓடியது. அதனை துரத்தி துரத்தி கடித்ததில் 8 ஆடுகள் படுகாயமடைந்தன.அதில் 2 ஆடுகள் கவலைக்கிடமாக உள்ளது. இதையடுத்து வருவாய்த் துறையினர், காங்கயம் போலீசார் கால்நடை துறை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காங்கயம் பகுதிகளில் விவசாயிகள் தங்கள் வருமானத்திற்காக ஆடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பயனடைந்து வருகின்றனர்.

இதுபோல் தொடர்ந்து தெருநாய்கள் ஆடுகளை கடித்து கொன்று வருவது தொடர்கதை ஆகி வரும் நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

தெரு நாய்களை கட்டுப்படுத்தவும், இறந்த ஆடுகளுக்கு உடனடியாக நடவடிக்கை நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement

Related News