தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாடகர் டி.எம் கிருஷ்ணாவுக்கு உடுமலை நாராயணகவி இலக்கிய விருது

உடுமலை, டிச.12: திருப்பூர் மாவட்ட இசைப்பள்ளி சார்பில் தமிழிசை விழா நடைபெற்றது. மாவட்ட இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவணமாணிக்கம் வரவேற்றார். உதவி இயக்குநர் செந்தில்குமார் தலைமை ஏற்று பேசினார். நிகழ்வின் முன்னிலையாக மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆகியோர் பேசினர்.

Advertisement

சிறப்புரையாக பாடகர் டி.எம்.கிருஷ்ணா பேசியதாவது:

இசை அனைவருக்கும் பொதுவானது. இதற்கு மொழி கிடையாது. கர்நாடக இசை என்றும் தமிழிசை என்றும் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இசை அனைவருக்கும் பொதுவானது. இசையை அனைவரும் ரசிக்க வேண்டும். இசையை ரசிக்கும்போது மனிதனுக்கு நோய் நீங்கும். இசையை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைக்க முடியாது. உலகம் முழுக்க பரந்து விரிந்து அனைத்துத்தலங்களிலும் பயணம் செய்யக்கூடியது.

இந்தியாவில் பிற மாநிலங்களில் இது போன்று 17 மாவட்டங்களில் இசைப்பள்ளி இல்லை. இதற்காக தமிழக அரசிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயணகவி பெயரில் விருது வழங்கியும் உடுமலை வரலாறு புத்தகம் கொடுத்து சிறப்பிக்கப்பட்டது. இதில் மாவட்ட இசைப்பள்ளி மாணவர்கள் மற்றும் உடுமலையின் ஆளுமைகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement