தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டம் கைவிட எம்பியிடம் மனு

திருப்பூர், செப். 3: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பூர் வருகை தந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், செம்மிபாளையம் தொடங்கி கோவை மாவட்ட பெரியநாயக்கன்பாளையம் வரை புதிதாக கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதற்கு டிஜிட்டல் நில அளவை செய்யப்பட்டு தார் சாலையில் அதற்கான குறியீடுகள் இடப்பட்டுள்ளது. இதனால் செம்மிபாளையம், சுக்கம்பாளையம், நடுவேலம்பாளையம், பள்ளிபாளையம், கிடாத்துறைபுதூர், காளிபாளையம், சாமளாபுரம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நில உரிமையாளர்கள் முழுமையான விவரம் பெற முடியாமல் பதட்டத்தில் உள்ளனர். கோவை நகரை சுற்றியுள்ள பகுதிகளில் குறுக்கும் நெடுக்குமாக ஏராளமான சாலை வசதிகள் உள்ளது. அதில் தேவையான சாலைகளை அகலப்படுத்தி போக்குவரத்தை விரிவுபடுத்தலாம் அதை கணக்கில் கொள்ளாமல் சுமார் 1400 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்து இந்த சாலை திட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்தத் திட்டத்தால் ஏராளமான சிறுகுறு, நடுத்தர விவசாயிகளின் நிலங்கள் பறிபோய் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே கோவை கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தை ஒன்றிய, மாநில அரசாங்கங்கள் உடனடியாக கைவிட வேண்டும். இந்த திட்டம் குறித்து முழுமையான விவரங்கள் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை ஆணையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலமாக பொதுமக்கள் அறியும் வகையில் உரிய விவரங்களை பொதுவெளியில் வெளியீடு செய்ய ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement