தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அனுப்பட்டி ஜெ.ஜெ.நகரில் குப்பை கொட்டிய லாரி, பொக்லைன் சிறை பிடிப்பு

பல்லடம், செப். 3: பல்லடம் அருகே அனுப்பட்டி ஜெ.ஜெ.நகர் அருகில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கோவை நீலம்பூர் பகுதியை சேர்ந்த குப்பைகளை எடுத்துவந்து கொட்டிய லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

Advertisement

பல்லடம் அருகே அனுப்பட்டி ஊராட்சி ஜெ.ஜெ. நகர் அருகில் முத்துசாமி, விஸ்வநாதன் ஆகியோருக்கு சொந்தமான உடையாகவுண்டர் தோட்டத்து நிலத்தில் பள்ளமாக இருந்த இடத்தில் கட்டிட இடிபாடு மண்களை கொண்டுவந்து கொட்ட நிலத்தின் உரிமையாளர்கள் அனுமதி வழங்கி இருந்தனர்.

இந்நிலையில் கோவை நீலம்பூர் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை லாரியில் எடுத்து வந்து கடந்த பல மாதங்களாக கொட்டப்பட்டு இருந்துள்ளது. ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் எந்த பிரச்னையும் இல்லாமல் டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தது. குப்பையின் துர்நாற்றம் அப்பகுதியில் வீச மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்து நிலத்தின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அத்துடன் குப்பைகளுடன் வந்த லாரி மற்றும் குப்பையை சமன்படுத்த பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து வந்த பல்லடம் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கொட்டப்பட்ட குப்பைகளை திரும்ப எடுத்துச்செல்லுமாறு அறிவுறுத்தினர். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisement

Related News