தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போக்குவரத்து காவல் துறையினர் ஆர்.டி.ஓ தீர்வுகாண வலியுறுத்தல்

அவிநாசி, செப். 2: அவிநாசி நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக இயங்கப்படும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவிநாசி நகரம், கோவை- சேலம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு, கோவை, திருப்பூர், ஈரோடு செல்லும் பெரும்பாலான தனியார், அரசு பஸ்கள் அவிநாசி நகருக்குள் வந்து செல்வதில்லை.

Advertisement

ஊருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாகவே தொடர்ந்து இயக்குவதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்வோரும் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். திருப்பூரில் இருந்து அவிநாசி வழியாக செல்லும் தனியார் பஸ்சில், அவிநாசியை சேர்ந்த பயணி ஒருவர், அவிநாசி புதிய பஸ் நிலையத்தில் இறங்குவதாக கூறி பயணச்சீட்டை கேட்டுள்ளார். அதற்கு கண்டக்டர், புதிய பஸ் நிலையத்திற்கு பஸ் செல்லாது, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீதுதான் பஸ் செல்லும் என்றும் கூறி சிறிது தூரம் பஸ் புறப்பட்டு வந்ததும், பாதியிலேயே இறக்கி விட்டுள்ளனர்.இதுகுறித்து, அவ்வப்போது பொதுமக்கள், சமூக அமைப்பினர் பிரச்சனைக்குரிய பஸ்களை சிறைபிடித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும், ஒருசில தனியார் மற்றும் அரசு பஸ்களின் கண்டக்டர், டிரைவர்கள் பயணிகளை அலட்சியப்படுத்தி, ஊருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாகவே தொடர்ந்து இயக்கி வருகின்றனர். கோவை காந்திபுரத்தில் அவிநாசிக்கு செல்லும் பயணிகளை பஸ்சில் ஏறவிடாமல் தடுக்கின்றனர். இதனால், காந்திபுரம் பஸ் நிலையத்திலேயே அவர்கள் வெகுநேரம் காத்திருக்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் பஸ்களில் அவிநாசி பயணிகளை ஏற்றுவதில்லை. இதேபோல ஈரோடு பஸ்நிலையத்திலும், இரவு நேரங்களில் பெரும்பாலான பஸ்களில் அவிநாசிக்கு வருகின்ற பயணிகளை, பஸ்சில் ஏற்றுவதில்லை.

கோவைக்கு மட்டுமே ஏற்றுவதாக புகார் தெரிவிக்கின்றனர். திருப்பூர் பஸ்நிலையத்திலும் இதே நிலைதான் தொடர்கிறது.எனவே, இப்பிரச்சனைக்கு போக்குவரத்து காவல் துறையினர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement