பைக் மோதி முதியவர் பலி
திருப்பூர், ஆக.29: திருப்பூர் அவிநாசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆதீஸ்வரன் (80). இவர் நேற்று முன் தினம் இரவு திருச்சி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது பின்னால் வந்த பைக் ஆதீஸ்வரன் மீது மோதியது.
Advertisement
இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற ஆதீஸ்வரன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement