தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்

திருப்பூர், நவ. 21: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் விண்ணப்பப் படிவங்களை வாக்காளர்களிடம் வழங்கி விட்டு சீக்கிரம் திருப்பித் தருமாறு அவசரப்படுத்துகிறார்கள். டிசம்பர் 4 வரை அவகாசம் இருக்கும் போது ஏன் இப்படி அவசரப்படுத்துகிறார்கள் என தெரியவில்லை.

Advertisement

விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்வதில் சந்தேகங்கள் ஏற்பட்டால் உரிய விளக்கங்கள் சொல்வதில்லை. பயிற்சி அளிக்கப்படாத காரணத்தால் தப்பும் தவறுமாக பூர்த்தி செய்யப்படுகிறது. 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில், அனைத்து பகுதிகளிலும் வாக்காளர் அட்டை வைத்திருக்கும் பல்வேறு நபர்களின் பெயர்கள் பட்டியலில் விடுபட்டுள்ளது. இதனை சரி செய்ய வேண்டும். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒரு மாத அவகாசம் என்பது மிகவும் குறுகியது. எனவே கூடுதல் கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

 

Advertisement