தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சித்தா மருத்துவமனை செயல்பட அனுமதிக்க வேண்டும்

திருப்பூர், டிச. 13: திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சித்தா மருத்துவமனை செயல்பட அனுமதிக்க வேண்டும் என டாக்டர்கள், பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், பழைய பஸ் நிலையம் அருகே மங்கலம் செல்லும் சாலையில் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி போதிய இட வசதியின்றி இருப்பதால் புதியதாக கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக பழைய பஸ்நிலையம் எதிரே 5 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு புதிய மாநகராட்சிக்கான கட்டிடங்கள் கட்டும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதற்கிடையே அந்த பகுதியில் 1989ம் ஆண்டு திருப்பூர் அரசு மருத்துவமனையுடன் சித்தா மருத்துவமனை பிரிவு தொடங்கப்பட்டது. நாள்தோறும் 400க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். புதன்கிழமைகளில் நீரிழிவு (சர்க்கரை) நோயாளிகள் என 700க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

Advertisement

தற்போது மாநகராட்சி தேவைக்காக சித்தா மருத்துவமனையும் காலி செய்யச்சொல்லி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. தற்போது சித்தா மருத்துவமனை செயல்பட போதிய இடம் ஒதுக்க கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து சித்தா டாக்டர்கள், பணியாளர்கள் கூறியுள்ளதாவது: சித்தா மருத்துவமனையை காலி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளோம். ஆனால் எங்களுக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை. 15 வேலம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறுகிறார்கள். ஆனால் அது வெகு தொலைவாக உள்ளதால் நோயாளிகள் சிரமப்படுவார்கள். இதனால் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இடம் கேட்கிறோம். அங்கு தர மறுக்கிறார்கள். எனவே இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் ஒதுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement