தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்கள் பாதுகாப்பு உறுதிசெய்ய இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள்

திருப்பூர், நவ. 13: பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் திருப்பூர் மாநகருக்கு வந்துள்ள 8 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களை, மாநகர போலீஸ் கமிஷனர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் அமைதியை பாதுகாத்து சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தமிழக காவல்துறை முக்கிய பங்காற்றி வருகிறது.

Advertisement

இந்நிலையில் காவல்துறையின் பணிகள் சிறக்கும் வகையில் புதிய போலீஸ் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், பாதுகாப்பு பணிகளுக்கு கூடுதல் வாகனங்கள், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் 2025-26ம் ஆண்டுக்கான போலீஸ் மானிய கோரிக்கையில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களை வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்து இருந்தார். அதன்படி, திருப்பூர் மாநகருக்கு 8 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் நேற்று சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

திருப்பூர் வந்த இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பெண் எஸ்.ஐ மற்றும் போலீசார் அடங்கிய குழு இந்த இளஞ்சிவப்பு ரோந்து வாகனத்தில் சென்று பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். இதற்காக, தனியாக பெண் போலீஸ் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Advertisement

Related News