தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்காச்சோளம் விற்பனைக்கு இருப்பதாக கூறி வியாபாரியிடம் ரூ.5.80 லட்சம் மோசடி

திருப்பூர், ஆக. 9: திருப்பூர் பல்லடம் ரோடு ஸ்ரீ நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (28). இவர் வெளிமாநிலங்களிலிருந்து மக்காச்சோளம் வாங்கி பல்லடம் பகுதியில் உள்ள கோழிப்பண்னைகளுக்கு கொடுத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், பிரவீனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு முகநூலில் ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதில் ராகேஷ் சிங் என்பவர் மக்காச்சோளம் விற்பனைக்கு வைத்திருப்பதாக கூறி அவருடைய செல்போன் என்னை பகிர்ந்திருந்தார்.

Advertisement

இதனை பார்த்த பிரவீன் அந்த செல்போன் எண்னுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அதில் பேசியவர் தன்னிடம் ரூ.7.30 லட்சம் மதிப்புடைய 35 டன் மக்காச்சோளம் இருப்பதாகவும், 80 சதவீதம் முன்பணம் கொடுத்து லாரியை அனுப்பிவிட்டால் மக்காச்சோளத்தை ஏற்றிவிடுவதாகவும், பல்லடத்தில் இறக்கிய பிறகு மீதமுள்ள 20 சதவீதம் பணம் கொடுக்க வேண்டுமென பிரதீப்பிடம் கூறியுள்ளார்.

இதனை நம்பிய பிரதீப் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு 80 சதவீதம் பணமான ரூ.5.80 லட்சத்தை அனுப்பிவிட்டு, லாரியை அனுப்ப தொடர்பு கொண்ட போது எதிர்முனையில் பேசியவரின் செல்போன் ஸ்விச்ட் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரதீப் ஆன்லைன் மூலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement