தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அவிநாசி அருகே நள்ளிரவில் பேக்கரியில் திருடியவர் கைது

அவிநாசி, அக். 8: அவிநாசி அருகே நள்ளிரவில் பூட்டை உடைத்து பேக்கரியில் திருடியவரை அவிநாசி போலீசார் நேற்று கைது செய்தனர். அவிநாசி அருகே பெரியாயிபாளையம் புது காலனியில் மயில்சாமி என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். ஆயுத பூஜையை முன்னிட்டு கடந்த 1ம் தேதி, கடையை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றிருந்தார். நேற்று காலை 11 மணி அளவில் மீண்டும் பேக்கரிக்கு வந்து பார்த்தபோது, யாரோ பேக்கரியின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லா பெட்டியில் இருந்த பணம் ரூ.350ஐ திருடிச்சென்றது தெரிய வந்தது.

Advertisement

இதையடுத்து மயில்சாமி, அவிநாசி போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று அருகில் இருந்த சிசிடிவி காமிரா காட்சிகளை பார்த்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், அவிநாசி தெக்கலூர் காந்திநகரை சேர்ந்த முத்துவேல் (69) என்பவர் திருடியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

 

Advertisement