தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்க போராட்டம் ஒத்திவைப்பு

திருப்பூர், ஆக.6: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று முதல் மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் கோரிக்கைகளை தொடர்பாக கடந்த 4ம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையருடன் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை சென்னையில் நடந்தது.

Advertisement

இதில் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்த ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்களிடம் ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் சார்பில் பேச்சு வார்த்தை விளக்க கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது.

இதில் பேச்சுவார்த்தையில் ஏற்படுத்தப்பட்ட உடன்பாடு மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் மற்றும் கூடுதல் இயக்குனர்கள் அளித்த வாக்குறுதிகள் எடுத்துக் கூறப்பட்டு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக தெரிவித்தனர்.  இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த பணியாளர்கள் கலைந்து சென்றனர். தமிழக அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் கூடிய விரைவில் அடுத்த கட்ட போராட்டங்களை முன்னெடுக்க போவதாகவும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம், ஏஐடியூசி சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் நடராஜன், மாநில செயலாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement