தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுமைப்பெண், தமிழ்புதல்வன் திட்டத்தில் 54 ஆயிரத்து 622 மாணவ, மாணவிகள் பயன்

திருப்பூர், அக். 25: திருப்பூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் 54 ஆயிரத்து 622 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனா். திருப்பூர் மாவட்டத்தில் நிறைந்தது மனம் நிகழ்ச்சி குறித்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் கல்லூரியில் பயிலும் 38,652 மாணவிகள் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 15,970 மாணவர்களுக்கும் என மொத்தம் 54 ஆயிரத்து 622 மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இது குறித்து மாவட்ட கலெக்டர் மனிஷ் கூறியதாவது: தமிழக முதல்வா் தமிழகத்தில் அனைத்து வளர்ச்சியிலும் பெண்களுக்கு உரிய இடம் வழங்கும் பொருட்டும், பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். பெண் கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், படைப்பியலாளராகவும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும். உருவாக அடித்தளமாக புதுமைப்பெண் என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழ் புதல்வன் என்னும் தொலைநோக்கு திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் மாணவர்கள் கல்லூரியில் அதிக அளவில் சேர்க்கை விகிதம் அதிகமாவதற்கு வழிவகை செய்யும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தினை அதிகப்படுத்தும். மாணவர்கள் பாட புத்தகங்கள் பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி கல்வியை மெருகேற்றிட உதவும். இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தி நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர் கால தூண்களாக திகழ்வார்கள் கல்வி இடை நிற்றலை தடுக்க முடியும்.

Advertisement

Related News