தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

போலீஸ் நிலையத்துக்கு வர கட்டாயம் இல்லை பாலியல் புகாரை பெற வீட்டிற்கே வரும் போலீஸ்

 

பல்லடம், ஆக.18: பாலியல் தொடர்பாக புகாரை பெற்றுக்கொள்ள வீட்டிற்கே போலீசார் வந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.பல்லடம் அருகே தனியார் கல்லூரியில் மாணவிகளுக்கு போலீசார் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அண்மையில் நடத்தினர். இதில் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கலையரசி பேசுகையில்: பாலியல் வன்முறை குறித்து புகார் அளிக்க போலீஸ் நிலையத்துக்குச் செல்ல வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. புகாரைப் பெற்றுக்கொள்ள போலீசாரே வீட்டுக்கு வருவார்கள்.

போக்சோ சட்டத்தில் விரைவாக நீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளுக்கும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால் தான் தற்போது நிறைய வழக்குகள் பதிவாகிறது. இதனால் பாலியல் குற்றங்கள் வெளியே தெரிந்தால் அவமானம், நீதிமன்ற அலைச்சல்கள் போன்றவை குறித்த தவறான எண்ணங்கள் மாற்றப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் ஏட்டு தீபா, கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.