தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்லடம் கடைவீதியில் நாளை கடைஅடைப்பு

பல்லடம், ஆக. 12: பல்லடம் கடைவீதியில் 13ம் தேதி கடைஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்க தலைவர் ஆனந்தா செல்வராஜ், செயல் தலைவர் பானு பழனிசாமி, செயலாளர் விமல் பழனிசாமி, பல்லடம் அனைத்து வணிகர் சங்க தலைவர் ராம்.கண்ணையன், மாவட்ட ஆலோசகர் அண்ணாதுரை, செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கூறுகையில்:பல்லடம் என்.ஜி.ஆர் சாலை கடைவீதியில் அனுமதியின்றி வாடகை, வரி எதுவும் இல்லாமல் சிலர் வியாபாரம் செய்வதால் என்.ஜி.ஆர் சாலை தினசரி மார்க்கெட் வியாபாரிகள் வாடகை கட்ட முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். என்.ஜி.ஆர் சாலையில் அனுமதியில்லாமல் செயல்படும் கடைகளால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தினசரி மார்க்கெட் வியாபாரிகளின் அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரமான கழிப்பிடம் மற்றும் தினந்தோறும் குப்பைகளை அகற்றாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

தமிழக அரசு நகராட்சி கடைகளுக்கு அறிவித்த 5 மாத கொரோனா கால வாடகை தள்ளுபடி செய்திடாமல் பல்லடம் நகராட்சி தற்போது வரை ரூ.32,87,028 வியாபாரிகளுக்கு வழங்காமல் இருந்து வருகிறது.பல்லடம் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் உள்ளே வராமல் வெளியே நின்று செல்வதாலும், ஆவின் பால் கடையில் மற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்வதாலும், அனைத்து வியாபாரிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தினசரி மார்க்கெட் கடைகள் இடிக்கப்பட்டு, அக்கடை உரிமையாளர்களுக்கு முன்னுரிமை அளித்து கடை வாடகைக்கு விட வேண்டும் என்ற அரசு ஆணையை பின்பற்றப்படவில்லை. பல்லடம் நகராட்சியின் அதிக வரிவிதிப்பாலும் தமிழகஅரசின் அதிக மின்சார கட்டண உயர்வால் வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அழிந்துவரும் வணிகத்தையும், வியாபாரிகளையும் காப்பாற்ற தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கம், பல்லடம் அனைத்து வணிகர் சங்கம் ஆகியவை சார்பில் பல்லடம் நகரில் தினசரி மார்க்கெட் கடைகள், என்.ஜி.ஆர் சாலை கடைகள், பேருந்து நிலைய கடைகள் மட்டும் வரும் நாளை (புதன்) ஒருநாள் அடையாள கடைஅடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது என்று தெரிவித்தனர்.

Advertisement

Related News