தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘உங்கள் வெகுமதியை பெற இன்றே கடைசிநாள்’ வங்கி பெயரில் வரும் குறுஞ்செய்திகள் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்

திருப்பூர், நவ. 11: தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்குநாள் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. தொழில்நுட்பம் வாழ்க்கையை எளிதாக்கும் அதே நேரத்தில் இணையதளம் வாயிலாக நடைபெறும் சைபர் கிரைம் குற்றங்கள் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. சமீப காலமாக அதிக பயனர்களைக் கொண்ட ஸ்டேட் பேங்க் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது போன்ற வெகுமதி பாய்ண்டுகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்ற குறுந்தகவல் மிகப்பெரும் மோசடியாக அமைந்துள்ளது. ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களை குறிவைத்து, அவர்கள் வங்கி கணக்குகளில் செய்துள்ள பரிவர்த்தனை மூலம் பெற்றுள்ள வெகுமதி புள்ளிகளை பெற இன்றே கடைசி நாள். உங்களுக்கு சுமார் 7500 ரூபாய் மதிப்புள்ள வெகுமதி புள்ளிகள் தயாராக உள்ளது.

Advertisement

அதற்கான இந்த லிங்கை கிளிக் செய்து உங்கள் வெகுமதியை பெறுங்கள் என எஸ்.எம்.எஸ் அல்லது வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பப்படுகின்றன. சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த போதிய விவரம் இல்லாத பயனாளர்கள் வாட்ஸ் ஆப்புக்கு வரும் லிங்கை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் விபரங்களை கொடுப்பதன் மூலம் அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணம் கையாடல் செய்யப்படுகிறது. எனவே, இதுகுறித்து வரும் எஸ்எம்எஸ், வாட்ஸ்ஆப் மற்றும் மின்னஞ்சல்களை உஷாராக கண்காணிக்க சைபர் கிரைம் போலீசார் மற்றும் வங்கி நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement