தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தவற விட்ட நகைகளை ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக ஊழியர்

 

Advertisement

பல்லடம், டிச.2: பல்லடத்தில் பயணி தவற விட்ட 10 பவுன் தங்க நகையுடன் கூடிய பையை அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் பத்திரமாக மீட்டு போலீசில் ஒப்படைத்தார்.

கோவையைச் சேர்ந்தவர் முகமது இர்பான் (17). இவர் தனது சகோதரி சுவீனா, (25), பாட்டி சைனமா, (65) ஆகியோருடன், திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்ல வேண்டி, அரசு பஸ்சில் பல்லடம் வந்தனர். அங்கிருந்து, திருப்பூர் பஸ்சில் ஏறும் போது, கையில் வைத்திருந்த 2 பைகளில் ஒன்றை பஸ் ஸ்டாண்டில் நின்ற பைக் மீது வைத்து விட்டு, மறந்தபடி பஸ்சில் ஏறி சென்றனர்.

பல்லடம் அரசு போக்குவரத்து கழகத்தில் நேர காப்பாளராக பணியாற்றி வரும் பழனிசாமி என்பவர், பயணி தவற விட்ட பையை மீட்டு ரோந்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.திருப்பூர் சென்ற பின் பையை தவற விட்டதை அறிந்த இர்பான் மற்றும் குடும்பத்தினர், மீண்டும் பல்லடம் திரும்பினர். போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுக்க சென்ற போது அங்கு தவற விட்ட பை இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர். அத்துடன் திரும்ப பையை பெற்றுச் சென்றனர்.

Advertisement