தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புளியங்குடி நகராட்சி ஆணையர் நாகராஜ் தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு தூய்மை பணியாளர்கள் நன்றி தெரிவிப்பு

புளியங்குடி, அக்.31: புளியங்குடிக்கு வருகை தந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நகராட்சி ஆணையர் நாகராஜ் தலைமையில் தூய்மை பணியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசியில் பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் நேற்றிரவு மாலை 7 மணியளவில் புளியங்குடி வழியாக மதுரை சென்றார். புளியங்குடியில் இ.யூ முஸ்லிம் லீக், தமுமுக கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சிந்தாமணி டோல்கேட் பகுதியில் நகராட்சி ஆணையர் நாகராஜ் தலைமையில் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் திரண்டு வந்து முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர். முதல்வர் வாகனம் வந்தவுடன் புவி சார் குறியீடு பெற்ற புளியங்குடி எலுமிச்சை பழத்தை நகராட்சி ஆணையர் நாகராஜ் பொக்கை வடிவில் முதல்வரிடம் வழங்கினார். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கியதற்கு பணியாளர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து கொண்டனர்.

Advertisement

Advertisement