தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மோசடி வழக்கில் மூதாட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை நாங்குநேரி கோர்ட் தீர்ப்பு

நெல்லை, அக்.31: களக்காடு அருகே மோசடியில் ஈடுபட்ட மூதாட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நாங்குநேரி கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2015ம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த செல்லம்மாள்(69) என்பவர் கூறியுள்ளார். காளிமுத்துவை நம்ப வைத்து பணம் வாங்கி ஏமாற்றியது தொடர்பாக களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்லம்மாளை கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு விசாரணையானது நாங்குநேரி கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் பூமிநாதன், நேற்று வழக்கில் சம்பந்தப்பட்ட செல்லம்மாளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் முறையாக ஆஜர்படுத்தி, குற்றவாளிக்கு தண்டனை பெற்று கொடுத்த நாங்குநேரி டிஎஸ்பி தார்ஷிகா நடராஜன், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் களக்காடு போலீசார், அரசு வக்கீல் வனிதா ஆகியோரை நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

Advertisement

Advertisement