தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஞ். தலைவி ஜாதி குறித்து அவதூறாக பேசிய கோழிப்பண்ணை உரிமையாளர் வன்கொடுமை சட்டத்தில் கைது

மானூர்,அக்.30: விளைநிலத்தில் பயிர்களை சேதப்படுத்தியதை தட்டி கேட்ட பஞ்சாயத்து தலைவியை ஜாதி குறித்து அவதூறாக பேசிய கோழிப்பண்ணை உரிமையாளரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மானூர் அருகேயுள்ள கட்டாரங்குளத்தைச்சேர்ந்தவர் சிவகுமார் மனைவி சுதா (35). பஞ்சாயத்து தலைவியாக உள்ள இவர் அதே ஊரை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது நிலத்தை குத்தகை மூலம் பயிர் செய்து வருகிறார். மேலும் அந்த நிலத்திற்கு அருகே முத்துப்பாண்டியின் சகோதரர் ஆறுமுகம் மகன் காளியப்பன் (40) என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் உள்ள கோழிகள், சுதா விளைநிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 26ம் தேதி கோழிப்பண்ணைக்கு சென்ற சுதா இது தொடர்பாக காளியப்பனிடம் தட்டி கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், சுதாவை ஜாதி குறித்து அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறித்து மானூர் போலீசில் சுதா அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து காளியப்பனை கைது செய்தனர்.

Advertisement

Advertisement

Related News