தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லையில் அனுமதியின்றி செயல்பட்ட 2 குடிநீர் குடோனுக்கு சீல்

நெல்லை, செப். 30: நெல்லை குறுக்குத்துறை பகுதியில் இயங்கி வந்த தனியார் குடிநீர் விநியோக குடோன் ஒன்றில், உரிய அரசு அனுமதியின்றி, முறையான சுத்திகரிப்பு செய்யாமல் பொதுமக்களுக்கு குடிநீர் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய புகார்கள் வந்தன. இதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் புஷ்பராஜ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், நேற்று காலை சம்பந்தப்பட்ட குடிநீர் குடோனில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, குடோன் எவ்வித அரசு அனுமதியும் பெறாமல் இயங்கி வந்ததும், குடிநீர் சுகாதாரமற்ற முறையில் சுத்திகரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, குடோனின் உரிமையாளரை நேரில் எச்சரித்த அதிகாரிகள், சட்டவிரோதமாக குடிநீர் குடோன் நடத்தக்கூடாது என அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்தக் குடோனுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதேபோல் டவுன் சாலியர் தெரு பகுதியிலும் அனுமதியின்றி இயங்கியதாக ஒரு குடிநீர் குடோனுக்கும் சீல் வைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நெல்லை மாநகரப் பகுதிகளில் இதுபோன்று அனுமதியின்றி செயல்படும் மற்ற குடிநீர் குடோன்கள் குறித்தும் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Related News