தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் மழையால் தாமரைகுளம் நிரம்பியது

களக்காடு, அக். 29: களக்காடு வட்டாரத்தில் பெய்த தொடர் மழையால் நிரம்பிய தாமரைகுளம் கடல் போல் காட்சியளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. அதுபோல களக்காடு பகுதியிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் ஆறு, கால்வாய்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. களக்காடு பகுதியின் முக்கிய நீராதாரமான தாமரை குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாயிலும் நீர் திறக்கப்பட்டது.

Advertisement

இதனைத் தொடர்ந்து தாமரைகுளம் நிரம்பி கடல்போல் காட்சியளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இவ்வாறு தாமரைகுளத்தில் நிரம்பிய தண்ணீர் மறுகால் பாய்ந்தது. குளத்திற்கு வரும் உபரிநீர் மறுகால் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து குளத்தின் மூலம் பாசனம் பெறும் விளைநிலங்களில் விவசாயிகள் வயல்களை சமன்படுத்தி டிராக்டர் உதவியுடன் தொழி அடித்தல், நாற்றங்காலில் நாற்று பாவுதல் உள்ளிட்ட விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கார் பருவத்தில் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கும் இந்த மழை பயனளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். தாமரை குளத்து பாசனத்தின் மூலம் சுமார் 500 ஏக்கர் விளை நிலங்களும், ஆயிரக் கணக்கான விவசாயிகளும் பயனடைந்து வருகின்றனர்.

Advertisement

Related News