தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுரண்டையில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 3 பவுன் செயின் பறிப்பு

சுரண்டை, செப். 27: சுரண்டை அருகே உள்ள சாம்பவர் வடகரை மாஞ்சோலை தெருவைச் சேர்ந்தவர் தேனையா. இவரது மனைவி திருமலையாச்சி(75). இவர் நேற்று பகல் 11 மணியளவில் சேர்ந்தமரத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக சாம்பவர்வடகரையிலிருந்து அரசு பஸ்சில் சுரண்டை பஸ் நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து சேர்ந்தமரம் செல்வதற்காக புளியங்குடி செல்லும் பஸ்சில் ஏறியுள்ளார். பஸ் புறப்பட்டு ஆலடிப்பட்டி விலக்கு அருகில் சென்ற போது திருமலையாச்சி கழுத்தில் அணிந்திருந்த 3பவுன் தாலி செயினை மாயமானதால் சத்தம் போட்டுள்ளார்.

Advertisement

உடனடியாக டிரைவர், நடத்துனர் பஸ் முழுவதும் தேடியும் கிடைக்காததால் சுரண்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுரண்டை இன்ஸ்பெக்டர் ஹரிஹரன், மூதாட்டியிடம் விசாரணை நடத்தினார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ஓடும் பஸ்சில் நடந்த இந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சுரண்டை பஸ் நிலையத்தில் செல்போன் உட்பட பொருட்கள் அடிக்கடி திருட்டு போவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement