தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கார்த்திகை 2வது சோமவார திருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி கோயிலில் 1008 பால்குடம் ஊர்வலம்

கோவில்பட்டி, நவ. 25: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் கார்த்திகை 2வது சோமவார திருவிழாவை முன்னிட்டு 1008 பால்குடம் ஊர்வலத்தை கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார். கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் யோகீஸ்வரர் உறவின்முறை சங்கம் சார்பில் 83ம் ஆண்டு கார்த்திகை 2வது சோமவார மண்டகப்படி திருவிழாவை முன்னிட்டு 1008 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. யோகீஸ்வரர் உறவின்முறை சங்க தலைவர் கோமதிராஜ் தலைமை வகித்தார். சங்க செயலாளர் வெயில்முத்து, பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கலந்து கொண்டு 1008 பால்குடம் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

பால்குடம் ஊர்வலம் பாரதி நகர் சிவயோகி வலம்புரி விநாயகர் கோயிலில் இருந்து புறப்பட்டு பசுவந்தனை ரோடு, எட்டயபுரம் ரோடு வழியாக சென்று செண்பகவல்லி அம்மன் கோயிலை வந்தடைந்தது. பின்னர் செண்பகவல்லி அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், அணி மாவட்ட செயலாளர்கள் பாசறை கவியரசன், மகளிரணி பத்மாவதி கனகசுந்தரம், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் போடுசாமி, வர்த்தக அணி மாவட்ட இணை செயலாளர் விஜயராஜ், வர்த்தக அணி நகர செயலாளர் பூக்கடை ஆனந்த், ஜெ. பேரவை மாவட்ட இணை செயலாளர் ஜயப்பன், கலைப்பிரிவு மாவட்ட இணை செயலாளர் செல்வ பாலாஜி, ஆவின் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News