தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

களக்காட்டில் பழுதடைந்த சாலை தற்காலிகமாக சீரமைப்பு

களக்காடு,அக்.25: களக்காட்டில் பழுதடைந்த சாலை தற்காலிக சீரமைப்பு பணிகள் தொடங்கியதால், இன்று நடைபெறவிருந்த நாற்று நடும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சேரன்மகாதேவி-பணகுடி சாலையில் களக்காடு பழைய பஸ் நிறுத்தம் மற்றும் நாகன்குளம் பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்கான தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படவில்லை. தற்போது பெய்து வரும் பருவ மழையினால் பள்ளங்களில் நீர் தேங்கி சாலை சகதிமயமாக காட்சி அளித்தது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டதால் வாகன ஒட்டிகள் பாதிப்பு அடைந்தனர். நோய்கள் பரவும் அபாயமும் நிலவியது.

Advertisement

எனவே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி புரட்சி பாரதம் கட்சி சார்பில் இன்று (25ம் தேதி) பழுதடைந்த சாலையில் நாற்று போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் புரட்சி பாரத கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாவட்ட செயலாளர் நெல்சன், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் சித்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. அத்துடன் பழுதடைந்த சாலையை தற்காலிகமாக சீரமைப்பு பணிகளும் உடனடியாக தொடங்கப்பட்டது. இதனைதொடர்ந்து நாற்று நடும் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் நெல்சன் அறிவித்துள்ளார்.

Advertisement

Related News