கடையத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பலி
கடையம், செப். 24: கடையத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பரிதாபமாக இறந்தார். தென்காசி மாவட்டம், கடையம் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த முருகனின் மகன் மோகன்ராஜ் (31). தூத்துக்குடியில் டிரைவராக வேலை பார்த்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு தனது வீட்டில் மாடியில் நின்றுகொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறிய அவர் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு கடையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மோகன்ராஜின் அண்ணன் சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement