தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2026 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து ஜன.7ல் முடிவு

சங்கரன்கோவில்,செப்.23: 2026 சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி குறித்து ஜன.7ல் முடிவு செய்யப்படும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி ெதரிவித்தார். இதுகுறித்து சங்கரன்கோவிலில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதிகளில் பெரும்பாலான கிராமங்களில் எந்தவொரு அடிப்படை வசதியும் நிறைவேற்றப்படவில்லை. தாருகாபுரத்தில் மாதத்திற்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வாசுதேவநல்லூர் அருகே சுப்பிரமணியபுரம் கோயிலில் மக்கள் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கின்றனர். சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடிக்கு அவர் பிறந்த கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தில் அனைவரும் மரியாதை செலுத்த அவர் பிறந்த தினமான டிச.20ம் தேதி அனுமதி வழங்க வேண்டும். தேவநேயப் பாவாணரின் சொந்த ஊரான கோமதிமுத்துபுரத்தில் அரசு தேவநேயப் பாவாணருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்.

Advertisement

சங்கரன்கோவில், நெல்லை, சென்னை உள்ளிட்ட இடங்களில் மணி மண்டபம் கட்டலாம். ஜமீன்தார் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சில நிலங்களை அரசு மீட்டு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 2026 ஜன.7ம் தேதி நடைபெற உள்ள புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாட்டில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது பற்றி முடிவு எடுக்கப்படும். 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் வரும். அதில் புதிய தமிழகம் மட்டுமல்லாமல் அனைத்து சமுதாயத்தின் பங்களிப்பும் இருக்கும்’’ என்றார். பேட்டியின் போது மாநில துணை அமைப்பாளர் ராஜேந்திரன், தென்காசி கிழக்கு மாவட்டச் செயலாளர் ராசையா, வடக்கு மாவட்ட இணைச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர்

உடனிருந்தனர்.

Advertisement