தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குற்றாலம் மெயினருவி தடாகத்தில் விழுந்த 10 அடி மலைப்பாம்பு

தென்காசி,நவ.21: குற்றாலம் மெயினருவி தண்ணீரில் அடித்து வரப்பட்டு தடாகத்தில் விழுந்த 10 அடி நீள மலைப்பாம்பை கண்டு அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக இரவு வேளைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களாக மெயினருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. நேற்று காலையில் ஐந்தருவியிலும் மதியத்திற்குப் பிறகு, மெயினருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று மெயினருவியில் மலைப்பாம்பு ஒன்று தண்ணீரில் அடித்து வரப்பட்டு தடாகத்தில் விழுந்தது. பின்னர் வெள்ள நீரில் அடித்து வரப்பட்டு ஐ லவ் யூ குற்றாலம் என்னும் செல்பி பாயிண்ட் அருகில் பாறையில் ஒதுங்கிய நிலையில் கிடந்தது. இதனைத் தொடர்ந்து குற்றாலம் மெயினருவியில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட தீயணைப்பு வீரர் மகாராஜன் மற்றும் வனத்துறையினர் இணைந்து மலைப்பாம்பை பிடித்தனர். சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்துறை மூலம் வனப்பகுதியில் விட்டனர்.

Advertisement

Advertisement