தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சர்வதேச சாரணர் முகாம் நெல்லையில் இருந்து உ.பி.க்கு 22 மாணவர்கள் பயணம்

நெல்லை, நவ.21: உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் சர்வதேச சாரணர் முகாமில் பங்கேற்க நெல்லையிலிருந்து 22 மாணவர்கள் ரயிலில் புறப்பட்டுச் சென்றனர். உத்தரப்பிரதேசத்தில் சர்வதேச சாரண, சாரணியர் அமைப்பின் ஜாம்புரி முகாம் நவம்பர் 23 முதல் 29 வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் அனைத்து நாடுகளைச் சேர்ந்த சாரண, சாரணிய இயக்கத்தினர் கலந்து கொள்கின்றனர். இம்முகாமில் கலந்து கொள்ளும் பொருட்டு நெல்லை மாவட்டத்தில் இருந்து சென்ற சாரண, சாரணிய மாணவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் நெல்லை ரயில் நிலையத்திற்கு சென்று வழி அனுப்பி வைத்தார். இதில் அரசு மேல்நிலைப்பள்ளி வன்னிக்கோனந்தல், சங்கர் மெட்ரிக் பள்ளி சாரண, சாரணிய அமைப்பில் உள்ள மாணவர்கள் 22 பேர் நேற்று முன்தினம் இரவு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல 3 ஆசிரியர்கள் உடன் சென்றனர். கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசு திருச்சி அருகே மணப்பாறையில் ஒரு முகாமை நடத்தியது குறிப்பிடத்தக்கது. முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்கள் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மட்டுமின்றி பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களையும் சந்திப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கும். இது மாணவர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement