தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தென்காசியில் கரும்புச்சாறு இயந்திரத்தில் பெண்ணின் கை சிக்கியதால் பரபரப்பு

தென்காசி,ஆக.13:தென்காசி அடுத்த ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் பத்மினி (32). இவர் தென்காசி அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தற்போது வசித்து வருகிறார். தென்காசி-மதுரை சாலையில் சாலையோரம் கரும்புச்சாறு இயந்திரம் வைத்து விற்பனை செய்து வருகிறார். நேற்று காலையில் கரும்புச்சாறு இயந்திரத்தை சுத்தம் செய்த போது தவறுதலாக கை உள்ளங்கை வரை இயந்திரத்தில் சிக்கிவிட்டது. வலியினால் துடித்த அவரை பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தென்காசி தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் பிரதீப் குமார் மற்றும் சிறப்பு அலுவலர் கணேசன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெல்டிங் இயந்திரத்தை வைத்து கரும்புச்சாறு இயந்திரத்தை வெட்டி எடுத்து பெண்ணின் கையை மீட்டனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Related News