தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புனலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை

செங்கோட்டை,அக்.11: புனலூர் அருகே வீட்டின் கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு அடர்வனப்பகுதியில் விட்டனர். செங்கோட்டை அடுத்த புனலூர் பிரவந்தூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பெரும்தோல் சங்கப்பாறையில் சிபி என்பவரது வீட்டில் கிணற்றில் நேற்று முன்தினம் இரவு சிறுத்தை ஒன்று தவறி விழுந்தது. இரவு முழுவதும் கிணற்றுக்குள்ளேயே வெளியே வர முடியாமல் சிறுத்தை தவித்தது. அதிகாலையில், சிபியின் குடும்பத்தினர் வீட்டின் பின்புறத்தில் உள்ள வேலி அமைக்கப்படாத கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, கிணற்றில் இருந்து சத்தம் வருவதைக் கேட்டபோது, சிறுத்தையை கண்டனர். இதையடுத்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisement

புனலூர் டிஎப்ஓ ஷாஜிகுமார், ரேஞ்ச் அதிகாரிகள் திவ்யா, மனோஜ், அம்பனாடு மற்றும் பத்தனாபுரம் பிரிவுகளின் வன அதிகாரிகள், புனலூர் தீயணைப்பு நிலைய குழுவினருடன் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தாமல் வலையைப் பயன்படுத்தி கிணற்றிலிருந்து வெளியே இழுத்து கூண்டில் அடைத்தனர். இதைதொடர்ந்து வலையில் சிக்கிய சிறுத்தை டாக்டர் சிபி தலைமையில் அம்பனாடு நிலையத்திற்கு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதில் சிறுத்தை ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. பிடிபட்ட சிறுத்தையை பத்தனம்திட்டா அடர்வனப்பகுதியில் விடப்பட்டது.

Advertisement