தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொதுமக்கள் மனு மீது உடனடி ஆணை

திசையன்விளை, அக். 10: திசையன்விளை பேரூராட்சியில் அம்மா மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமை வகித்தார். முன்னாள் லயன்ஸ் கவர்னர் சுயம்புராஜன் முன்னிலை வகித்தார். தாசில்தார் நாராயணன் வரவேற்றார். சபாநாயகர் அப்பாவு முகாமை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு பட்டா வழங்கி பேசுகையில், இந்த முகாமில் நீங்கள் கொடுக்கும் மனுக்களை முதல்வரிடம் நேரடியாக கொடுப்பது போன்று நினைத்து கொள்ளுங்கள். ஏற்கனவே உள்ள பணிகளுடன் சேர்த்து தான் அதிகாரிகள் இந்த பணியையும் செய்கிறார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வழங்கும் மனுக்களுக்கு ரசீது வழங்கப்படும்’ என்றார். முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மனுக்கள் 333 உள்பட மொத்தம் 528 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 7 மனுக்களுக்கு உடனடி உத்தரவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் பால்ராஜ், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், பேரூராட்சி கவுன்சிலர்கள் கமலா நேரு, அலெக்ஸ், கண்ணன், உதயா, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் நெல்சன், லிங்கராஜ், சுபாஷ், எழில், ராஜா, புளியடிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News