தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நாய்கள் துரத்தியதால் ஊருக்குள் புகுந்த மிளா

கடையம், ஆக.8: கடையம் அருகே நாய்கள் துரத்தியதால் பதறி ஓடி ஊருக்குள் புகுந்த மிளாவை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். கடையம் அருகே மீனாட்சிபுரம் பகுதியில் முள்ளிமலை பொத்தை உள்ளது. இந்த பொத்தையில் கரடி, காட்டுப்பன்றி, மிளா உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது பொத்தையை விட்டு வெளியேறி அருகிலுள்ள தோட்டம் மற்றும் விளைநிலங்களுக்கு சென்று உணவு தேடி வருகிறது. இந்நிலையில் நேற்று பொத்தையிலிருந்து வெளியேறி ரவணசமுத்திரம் பகுதியில் ஆற்றங்கரையோரத்தில் மிளா ஒன்றை நாய் துரத்தி சென்றது. அப்போது நாய்களிடம் இருந்து தப்பித்து ஊருக்குள் மிளா சென்று பதுங்கி இருந்தது. அங்கிருந்து நாய்கள் துரத்தியதால் ஆற்று நீரில் மிளா தஞ்சமடைந்தது. இதையடுத்து கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடையம் வனச்சரக அலுவலர் கருணா மூர்த்தி உத்தரவின்படி வனத்துறை வேட்டை தடுப்பு காவலர் வேல்ராஜ் மற்றும் வனத்துறையினர் நாய்களை அங்கிருந்து விரட்டி மிளாவை உயிருடன் மீட்டு முள்ளிமலை பொத்தை பகுதியில் பத்திரமாக கொண்டு சென்றுவிட்டனர்.