தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூலைக்கரைப்பட்டி அருகே சமையல் மாஸ்டரை தாக்கிய விவசாயிக்கு வலை

களக்காடு,நவ.6: மூலைக்கரைப்பட்டி அருகே பணத்தகராறில் சமையல் மாஸ்டரை தாக்கிய விவசாயியை போலீசார் தேடி வருகின்றனர். மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள தெய்வநாயகபேரி வடக்குத்தெருவை சேர்ந்தவர் செல்லையா மகன் சரவணன் (21). சமையல் மாஸ்டராக உள்ளார். இவரது பாட்டி காசி குலுக்கல் சீட்டு நடத்தி வருகிறார். அவரிடம் அதே ஊரைச் சேர்ந்த கந்தசாமி மகன் ஆறுமுகத்துரையும், அவரது தம்பி விவசாயி இளையராஜாவும் சீட்டு போட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகத்துரை, சரவணனிடம் சீட்டு பணம் ரூ.3 ஆயிரத்தை கொடுத்து அவரது பாட்டியிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த பணத்தை சரவணன் பாட்டி காசியிடம் கொடுக்காமல், செலவு செய்து விட்டார்.

Advertisement

இதுதொடர்பாக சரவணனுக்கும், ஆறுமுகத்துரை, அவரது தம்பி இளையராஜாவுக்கிடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று சரவணன் தனது பாட்டி வீட்டில் இருக்கும் போது அங்கு வந்த இளையராஜாவுக்கும், அவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இளையராஜா, அவரை மண் வெட்டியால் சரமாரியாக தாக்கினார். இதனால் படுகாயமடைந்த சரவணனை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முனைஞ்சிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் இளையராஜா மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Advertisement

Related News