தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆலங்குளம் அருகே பள்ளியில் ரூ.36 லட்சத்தில் புதிய வகுப்பறை

ஆலங்குளம்,ஆக.6: ஆலங்குளம் அருகே பூலாங்குளம் பஞ்சாயத்து அழகாபுரி பாபநாசபுரத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இப்பள்ளியில் வகுப்பறை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மேலாண்மை குழு தலைவர் ஆகியோர் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏவை சந்தித்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய 2 வகுப்பறை கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையேற்று எம்எல்ஏ அப்பள்ளிக்கு (CFSIDS) குழந்தைகள் நட்பு பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.36 லட்சம் நிதியை பெற்று கொடுத்தார்.

இதைதொடர்ந்து புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சொர்ண செலினா தலைமை வகித்தார். ஊர் தலைவர் செல்லப்பா, ஓபிஎஸ் அணி மாநில அமைப்பு செயலாளர் ராதா, மாவட்ட செயலாளர் கணபதி, மாவட்ட பொருளாளர் நூருல் அமீர், அஞ்சான்கட்டளை பஞ்சாய த்து தலைவர் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் பாலையா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சக்தி வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பேசினார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் முருகன், ஓபிஎஸ் அணி கனக பிரசாத், கணேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். உதவி ஆசிரியை ரேகா நன்றி கூறினார்.

Related News