தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆலங்குளத்தில் பரபரப்பு

ஆலங்குளம், ஆக.5: ஆலங்குளம் பரும்பு ராஜீவ் காந்தி நகர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்ட் சேவியர், எஸ்ஐ சத்யவேந்தன் மற்றும் போலீசார் நேற்று மாலை தீவிர கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ராஜீவ்காந்தி நகர் வாட்டர் டேங்க் அடியில் சந்தேகத்திற்கிடமாக வகையில் மூன்று பேர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து உடனடியாக போலீசார் அவர்களை துரத்தி சென்று வாலிபர் ஒருவரை மடக்கி பிடித்தனர். இருவர் தப்பியோடி விட்டனர். பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் பிரியதர்ஷன் (39) என்பதும், ஆலங்குளம் காய்கறி மார்க்கெட்டில் மினிலாரி டிரைவராக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. அவர் வைத்திருந்த சாக்கு பையை சோதனை நடத்தியதில் ரூ.85 ஆயிரம் மதிப்பிலான எட்டரை கிலோ கஞ்சா அவரிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து ஆலங்குளம் எஸ்ஐ சத்யவேந்தன் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்ததோடு, அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பெர்னாட் சேவியர் தலைமையில் போலீசார் தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.

Related News