தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மானூர் அருகே பாலத்தில் அமர்ந்து மது அருந்திய தொழிலாளி தவறி விழுந்து பலி

 

நெல்லை, ஆக. 18: மானூர் அருகேயுள்ள தென்கலம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (55). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள சிறுபாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர் அவர், வீட்டிற்குத் திரும்பவில்லை எனத் தெரிகிறது. நேற்று காலை, அந்த வழியாக சென்ற பொதுமக்கள், பாலத்தில் இருந்து விழுந்து மாரியப்பன் அசைவற்று கிடப்பதை பார்த்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பாலத்தின் சுவரில் அமர்ந்து மது அருந்தியபோது, போதையில் நிலைதடுமாறி மாரியப்பன் கீழே விழுந்து இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், உடற்கூராய்வு அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி

வருகின்றனர்.