தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாவு அரைக்கும் போது கிரைண்டர் தீப்பிடித்து வீட்டில் பொருட்கள் எரிந்து நாசம்

விகேபுரம்,டிச.15: விகேபுரத்தில் வீட்டில் மாவு அரைக்கும் போது கிரைண்டர் தீப்பிடித்ததில் வீட்டில் உள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. விகேபுரம் அம்பலவாணபுரம் நடுத்தெருவை சேர்ந்த அனந்தராமன் மகன் அபிநவ் (28). இவர் வெளியூரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது தந்தை இறந்த பிறகு இவரது தாய் கற்பகம் மட்டுமே விகேபுரத்தில் வசித்து வருகிறார்.

Advertisement

தற்போது விடுமுறைக்காக அபிநவ் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் கற்பகம் கிரைண்டரில் மாவு அரைத்துள்ளார். அப்போது அவர் கிரைண்டரை ஓட விட்டு,விட்டு வெளியே வந்து பக்கத்து வீட்டினரிடம் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு கிரைண்டர் தீப்பிடித்து எரிந்தது.

மளமளவென பற்றி எரிந்த தீ, கிரைண்டர், பிளாஸ்டிக் சேர், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் மரச்சாமான்கள் உள்ளிட்டவை பற்றி எரிந்து புகை மண்டலமாக வீடு முழுவதும் பரவியது. அப்போது அக்கம்பக்கத்தினர், உங்கள் வீட்டில் இருந்து புகை வருவதாக அவரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் ஓடி சென்று பார்த்துள்ளார். ஆனால் அவரால் வீட்டிற்குள் யாரும் செல்ல முடியாத அளவிற்கு புகை சூழ்ந்து காணப்பட்டது.

உடனடியாக சுதாரித்து கொண்ட மகன் அபிநவ் வீட்டில் உள்ள மின்சாரத்தை துண்டித்து ஜன்னல், கதவுகளை உடைத்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். தகவலின் பேரில் அம்பை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

ஆனால் அதற்குள் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இதைதொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வீட்டில் தீ முழுமையாக அணைந்து விட்டதா? என ஆய்வு செய்தனர். தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மின்கசிவு காரணமாக கிரைண்டர் தீப்பற்றி எரிந்து இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் கிரைண்டர் தீப்பிடித்ததில் வீட்டில் பொருட்கள் எரிந்து நாசமானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News