தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வீட்டுத்தோட்டம் அமைக்கும் வழிமுறைகள் தோட்டக்கலைத்துறையினர் டிப்ஸ்

 

தேனி, ஜூலை 4: பொதுமக்கள் வீட்டுத்தோட்டம் அமைக்க கடைப்பிடிக்க ேவண்டிய வழிமுறைகள் குறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது: வீட்டில் தோட்டம் அமைக்கும் இடத்தில் போதிய அளவில் சூரிய ஒளி இருக்க வேண்டும். வெண்டை, கொத்தவரை, முள்ளங்கி போன்ற காய்கறி விதைகளை நேரடியாக விதைக்க வேண்டும் விதையின் அளவை விட இரண்டரை மடங்கு ஆழத்தில் (சுமாராக 5 முதல் 6 மிமீ) விதைகளை ஊன்ற வேண்டும். கீரை வகைகளின் விதைகள் மிகச்சிறியதாக இருப்பதால், ஒரு பங்கு விதையுடன் இரண்டு பங்கு மணல் அல்லது நுண்ணுயிர் உரத்தை கலந்து தூவ வேண்டும்.

மண்ணின் ஈரத்தன்மை அடிப்படையில், வாரத்திற்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். செடிகளுக்கு வாரம் ஒருமுறை உரமிட்டால் அதன் வேர்கள் நன்றாக வளரும். தொழு உரம் அல்லது மண்புழு உரம் (கைப்படி அளவு அல்லது 100 கிராம்) போன்றவை மற்றும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போபாக்டீரியா 10 கிராம் போன்றவற்றை இடுவதால் செடிகள் நன்கு வளர்ந்து நல்ல மகசூல் கொடுக்கும்.

தக்காளி, கத்தரி, கொத்தவரை ஆகியவற்றை நடவு செய்த 40 நாட்களுக்கு பிறகு (1.5 முதல் 25 அடி உயரத்தில் வளரும் போது) செடிகள் சாயாமல் இருக்க முட்டுக்கொடுக்க வேண்டும். தென்படும் களைகளை கைகளால் உடனடியாக அகற்ற வேண்டும். செடிகளின் ஆரம்ப வளர்ச்சி பருவத்தில் சாறு உறிஞசும் பூச்சிகளான அசுவினி, மாவுப்பூச்சி, தத்துப்பூச்சி, இலைப்பேன் ஆகியவற்றின் பாதிப்பு அதிகம் தென்படும். தலை பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் கலந்த கரைசலை செடிகளின் மீது வாரம் ஒருமுறை தெளித்து, இவற்றின் பாதிப்பை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related News