தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயில் உண்டியல் உடைத்து காணிக்கை திருட்டு ஒடுகத்தூர் அருகே துணிரகம்

ஒடுகத்தூர், டிச.2: ஒடுகத்தூர் அருகே கோயிலில் உண்டியல் உடைத்து அதிலிருந்த காணிக்கையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில் உள்ளது. இதனால், வாரம் தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்து வருகிறது. அதேபோல், வாரம் தோறும் நடக்கும் சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்கள் சிலர் கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கையை திருடிச் சென்றுள்ளனர்.

Advertisement

இந்த நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை என்பதால் வழக்கம்போல் கோயில் பூசாரி மற்றும் நிர்வாகிகள் கோயிலுக்கு வந்துள்ளனர். அப்போது, கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக வேப்பங்குப்பம் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இன்ஸ்பெக்டர் புனிதா தலைமையிலான போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து கோயில் உண்டியல் உடைத்து காணிக்கை திருடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Advertisement

Related News