தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

களக்காடு அருகே சூறை காற்றுடன் பெய்த மழையால் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தது

களக்காடு, ஜூன் 1: களக்காடு அருகே சூறைகாற்றுடன் பெய்த மழையினால் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து நாசமானது. இதனால் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். களக்காடு பகுதியில் கடந்த 1 வாரமாக சாரல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் ஆறு மற்றும் கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தலையணையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தலையணை மூடப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் களக்காடு அருகேயுள்ள மஞ்சுவிளை அரசப்பத்து பகுதியில் சூறை காற்றுடன் சாரல் மழை பெய்தது. சுழன்று அடித்த காற்றினால் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து நாசமானது. இவைகள் ஏத்தன் ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்த வாழைகள் மஞ்சுவிளையை சேர்ந்த விவசாயி தேவராஜ் (55) என்பவருக்கு சொந்தமானது. குலை தள்ளி அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து வாழைகள் காற்றினால் சேதமடைந்ததால் அவருக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி விவசாயிகள் வட்டிக்கு கடன் வாங்கியும், தங்கநகைகளை அடகு வைத்தும் விவசாயம் செய்து வருகின்றனர். பயிர்களை காப்பாற்ற விளைநிலங்களில் இரவு, பகலாக பாடுபட்டு வருகின்றனர். வனவிலங்குகளும் பயிர்களை சேதப்படுத்தி வரும் நிலையில் சூறை காற்றினாலும் வாழைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விவசாயத்திற்காக வாங்கிய கடன்களை திரும்ப செலுத்துவது எப்படி? நகைகளை மீட்பது எப்படி? என்பது தெரியாமல் தவிப்பு அடைந்துள்ளனர். எனவே அதிகாரிகள் காற்றினால் சாய்ந்த வாழைகளை கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி சில்கிஸ் சாமுவேல் கூறுகையில், ‘உரிய நேரத்தில் உரமிட்டு, தண்ணீர் பாய்த்து பாதுகாத்து வந்த வாழைகள் குலை தள்ளி மகசூல் தரும் வேளையில் சூறை காற்றினால் நாசமாகி விட்டது. ஏற்கனவே இப்பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதுபோல காற்றினால் ஆயிரக்கணக்கான வாழைகள் சேதமடைந்தது. அதற்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை” என்றார்.

Advertisement

Related News